Wednesday, November 10, 2010

நீதி என்பது நீதியே அல்ல

என்னை பொருத்தவரை மக்களிடம் ஒரு மாற்றம் தெரிகிறது.தவறு செய்தவன் தண்டிக்கப்படவேண்டும் அதுவும் அந்த தவறால் பாதிகபடுபவர்களின் முன்னிலையில் அல்லது அவர்கள் அறிவுக்கு எட்டுகின்ற நிலையில் தண்டிக்கப்படவேண்டும் இதன் மூலம் அந்த பாதிப்பின் காயம் கொஞ்சம் ஆறும் மேலும் இவ்வாறான தவறுகள் குறைய ஆரம்பிக்கும்.

பொதுவாக இந்திய சமூகவியலில் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.நாம் எத்தனயோ என்கவுன்டர்களை பார்த்து இருக்கிறோம்.இது திட்டம் இடப்பட்ட படுகொலையே (என்கவுன்டர்) ஒரு வழக்கில் ஒரே குற்றத்திற்காக விசாரணை கைதியாக அழைத்து செல்லப்பட்ட இருவர் இரு வேறு வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டதே இதை படுகொலைதான் என்பதற்கு ஆதாரமாக நாம் சொல்லலாம்.

இன்றைய அரசியல் சூழலும் மக்களுக்கு நன்மை பயபதாய் இல்லை.குற்றங்கள் மலிந்து கிடக்கிறது.நான் சொல்லுவது தமிழ்நாட்டை மட்டும் இல்லை ஒட்டு மொத்த இந்தியாவை தான் சொல்லுகிறேன்.பல்வேறுபட்ட கலாச்சார குழுமமான நமது இந்தியா தேசத்தில் வசதிபடைதவன் ,கொஞ்சம் புத்திசாலித்தனம் உள்ளவன் ,அரசியல் செல்வாக்கு உள்ளவன் எந்த தவறையும் செய்துவிட்டு சர்வ சாதரணமாக உலா வருகிறான் ஆனால மோகனகிருஷ்ணன் போன்ற பாமரன் தவறு செய்யும்போது இப்படிப்பட்ட தண்டனைக்கு ஆளாக வேண்டி வருகிறது.

இப்படி பட்ட நிறம்மாறும் நியாங்களால் மக்கள் தங்களின் குணங்களை மாற்றிக்கொள்ள தள்ளபடுவார்கள் அதன் விளைவு இநதிய தேசம் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போய்விடும்.

அவ்வாறு நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் சிலவற்றை நாம் மாற்றி அமைக்க வேண்டும் அவையாவன

மக்கள் நலன் கருதும் ஒழுக்கம் உள்ள நபர்களை அரசியலில் ஆதரிக்க வேண்டும் .

மனிதாபிமானம் இல்லாத ,சுயநலத்தோடு செயல்படும் அரசியல் வாதிகளை அரசியளைவிட்டே விரட்டவேண்டும்

சிறுவர் ,சிறுமிகள் ,இளைஞ்ஞர்கள் ஆகியோரிடம் நல்ல பண்பு நலன்களை பரப்பும் முகமாக தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

சமூக ,கலாச்சார வழிமுறைகள புறந்தள்ள செய்யும் வகையில் வெளியாகும் சினிமா ,பத்திரிகை ,வானொலி போன்றவற்றை முற்றிலுமாக தடைசெய்யவேண்டும்

இந்த தண்டனை எல்லோருக்கும் கொடுக்கப்படவேண்டும்.பிறருடைய உரிமையில் யார் குறுக்ககீடு செய்தாலும் அது குற்றமே.இருபவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி என்பது நீதியே அல்ல.          

Saturday, October 30, 2010

அநீதி பற்றி இறைத்தூதர் (ஸல்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்" என்று கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், "அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)" என்று கூறினார்கள் என்பதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்). (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் யாரென்றால், மனிதர்களிலேயே கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.

உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, "நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும் அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்" என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான்.

Sunday, October 24, 2010

நாத்திகர்களின் கடவுள்

நாத்திகர்களின் வேதம்,கடவுள்

பொதுவாக (அனைத்து) மதவாதிகளிடம் ஒரு பழக்கம் உண்டு.இவர்களிடம் எந்த ஒன்றை பற்றியும் கேட்டால்
கடவுள் சொல்கிறார் என்றும் ,வேதத்தில் இருக்கிறது என்றும் சொல்வார்கள்.ஆனால் அவ்வாறு சொல்லப்பட்டது எதற்காக என்றோ,அவ்வாறு சொல்லப்பட்டதன் நோக்கம் என்ன என்றோ கேட்டால் பேந்த ,பேந்த முழிப்பார்கள் அல்லது ஏதானும் காரணம் சொல்லி அந்த இடத்தை விட்டு ஓடுவார்கள் மேலும் அப்படி கேள்வி கேட்பவர்களை வழிகேடர்கள் என்றும் நரகவாசிகள் என்றும் சபிப்பார்கள் -

ஏன் அவ்வாறு ?

அவர்களின் மதத்தை பற்றிய ஆழமான அறிவு இல்லை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதை போலவே நாத்திகர்களிடம் ஒரு பழக்கம் உண்டு.இவர்களிடம் கடவுள் மறுப்பை பற்றி கேட்டால் பெரிய பெரிய விஞ்ஜானிகளின் கூற்றினை ஆதாரமாக சொல்லுவார்கள்.ஏன் எனில் இவர்களை பொருத்தவரை விஞ்ஜானிகள் கடவுள் ,அவர்கள் எழுதிய புத்தகங்கள் வேதம்.

மேல் சொன்ன மதவாதிகளிடம் எப்படி மதத்தை பற்றிய முழுமையான அறிவு இல்லையோ அவ்வாறே இந்த நாத்திகர்களிடம் கடவுள் எதிர்ப்புக்கான சுய சிந்தனை இல்லை.

எனவே கடவுள் எதிர்ப்புக்கான ஆதாரத்தை கொண்டுவாருங்கள் என்றால் விஞ்ஜானிகளின் கூற்றையும் ,அவர்களின் புத்தகங்களையும் காட்டுவார்கள்.

ஒரு விஞ்ஞானியீன் கூற்றை அதே சம காலத்தில் வாழ்ந்த சக
விஞ்ஞானிகளாலும் பிறகு வருகின்ற விஞ்ஞானிகளாலும் மறுக்கப்டுவதை காலம் காலமாக கண்டுவருகிறோம்.அப்படியானால் இவர்களின் கூற்றுக்கு ஏற்ப கருத்து சொல்லும் விஞ்ஞானிகளை தங்களின் கடவுளாகவும்
அவர்களின் புத்தகங்களை வேதமாகவும் கொண்டுள்ளார்கள் என்று சொல்லலாமா

அப்படி சொல்லலாம் என்றால் இவர்கள் பகுத்தறிவு ,சுயசிந்தனை அற்றவர்கள் என்றுதானே அர்த்தம் –

ஆக

நாத்திகர்களின் வேதம் – விஞ்ஞானிகளின் புத்தகம்
நாத்திகர்களின் கடவுள் – விஞ்ஞானிகள்

அப்படிதானே ?

Tuesday, August 10, 2010

வருடாந்திர பயிற்சி முகாம்

வருடாந்திர பயிற்சி முகாம்

இன்னும் சில தினங்களில் வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்க உள்ளது

உலகின் அனைத்து நாடுகளிலும் இது நடைபெறுகிறது.இது முப்பது நாட்கள் நடைபெறும்.இதற்க்கு வயதுவரம்பு இல்லை.யாரேல்லாம் ஆரோக்கியமாக உள்ளனரோ அவர்கள் அனைவரும் கட்டாயம் இந்த பயிற்சியை பெறவேண்டும்.கர்ப்பிணி பெண்கள்,மற்றும் நோயாளிகள்,தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆகியோருக்கு சலுகைகள் அளிக்கபடுகிறது.

கர்ப்ப காலம் ,நோய் ,தாய்பால் கொடுக்கும் காலம் முடிந்த பின் இந்த பயிற்சியை பெறவேண்டும்.

கடந்த ஆண்டு முழுமையாக பயிற்சி பெறாமல் இருந்தவர்கள் இது வருடந்தோறும் நடைபெறுவது தானே என்று ஏனோதானோவென்று பயிற்சி பெறுவார்கள்.

ஆனால் இந்த பயிற்சியின் பயனை வருடம் முழுவதும் அனுபவிததினால் கடந்த ஆண்டு பயிற்சியை முழுமையைக பெற்றவர்கள் இந்த ஆண்டும் ஆர்வத்தோடு கலந்து கொள்வார்கள்.

இந்த பயிற்சியின் நோக்கம்

இந்த பயிற்சி அளிக்கபடுவதின் நோக்கம் இந்த ஒட்டுமொத்த அண்ட சராசரங்களின் அதிபதியான ஏக பரம்பொருளை அவனுடைய உண்மையான தன்மைகளின் அடிப்படையில் புரிந்துகொள்வதும்,அவனுடைய அருளை இந்த உலகிற்காகவும் ,மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்விற்காகவும் பெற்றுகொள்வது மட்டுமில்லாமல்
தன்னை முழுக்க முழுக்க ஏக பரம் பொருளாகிய இறைவனிடம் ஒப்படைபதே நோக்கம்.

அதாவது இந்த உலகில் சிலர் பொருளாதாரத்தில், அறிவாற்றலில்,அரசியலில் ,சமூகத்தில் மேலாண்மை உள்ளவர்களாக இருப்பர்.அதனால் பிற மக்கள் முன்னிலையில் தங்களை மாமனிதர்களாய் காட்டி தங்கள் கீழ் உள்ள மக்களை அடிமைகளாய் நடத்துவதும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகளே.இவர்கள் இந்த பயிற்சியை முழுமையாக பெற்றால் நாம் எவ்வளவுதான் பெரிய மனிதர்களாய் இருந்தாலும் நமக்கு மேல் இறைவன் இருக்கிறான் அவன் நாடினால் நாம் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவோம் என்ற எண்ணத்தை இந்த பயிற்சி அவருக்கு உணர்த்தும்.

ஒட்டுமொத்த பயிற்சி காலங்களிலும் நாம் நோன்புதான் வைக்கிறோம்.நோன்பல்லாத இன்ன பிற செயல்களை நாம் செய்கிறோம்.ஆனால் அதன் பலன்களை நாம் உணர்வதில்லை.

பயிற்சியின் கால பாடங்கள்

பயிற்சியின் கால பாடங்களை மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு பத்து நாட்களிலும் கற்று கொடுக்கபடுகிறது.


இறைத்தூதர் முகமது (ஸல்) அவர்கள் இந்த பயிற்சி காலத்தை மூன்று பாகங்களாக பிரித்து காட்டியுள்ளார்கள்.அதன்படி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆதார நூல்; இப்னு குஜைமா எண் 191

சரி ,நடைமுறையில் நாம் இந்த நோன்பின் போது பசிதிருபது மட்டுமே காண்போம் ஆனால் பசிதிருபது நோக்கம் இல்லை இதன் மூலம் நாம் உளவியல்ரீதியாக நம்மை
இறைவனிடம் ஒப்படைபதே நோக்கம்.

மேலே கோடிட்டுக் காட்டி உள்ள இறைதூதரின் வாக்கை நன்கு கவனித்தால் அருட்கொடை ,பாவமன்னிப்பு ,நரக மீட்சி இவை அனைத்தையும் நாம் பெற வேண்டி இந்த பயிற்சி அளிக்கபடுகிறது.

இந்த பயிற்சியின் மூலம் நாம் இவைகளை பெறவில்லை என்று சொன்னால் பசிதிருபதால் பயன் இல்லை.

ஒருவன் பொய் பேசுவதையும்,புறம் பேசுவதையும் விடவில்லையோ
அவன் பசிதிருபதும் ,தாகித்திருபதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை

என்ற இறை தூதரின் வாக்கை சொல்லி முடிக்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு
http://tvcode.blogspot.com/2009/08/blog-post_2601.html