நாத்திகர்களின் வேதம்,கடவுள்
பொதுவாக (அனைத்து) மதவாதிகளிடம் ஒரு பழக்கம் உண்டு.இவர்களிடம் எந்த ஒன்றை பற்றியும் கேட்டால்
கடவுள் சொல்கிறார் என்றும் ,வேதத்தில் இருக்கிறது என்றும் சொல்வார்கள்.ஆனால் அவ்வாறு சொல்லப்பட்டது எதற்காக என்றோ,அவ்வாறு சொல்லப்பட்டதன் நோக்கம் என்ன என்றோ கேட்டால் பேந்த ,பேந்த முழிப்பார்கள் அல்லது ஏதானும் காரணம் சொல்லி அந்த இடத்தை விட்டு ஓடுவார்கள் மேலும் அப்படி கேள்வி கேட்பவர்களை வழிகேடர்கள் என்றும் நரகவாசிகள் என்றும் சபிப்பார்கள் -
ஏன் அவ்வாறு ?
அவர்களின் மதத்தை பற்றிய ஆழமான அறிவு இல்லை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதை போலவே நாத்திகர்களிடம் ஒரு பழக்கம் உண்டு.இவர்களிடம் கடவுள் மறுப்பை பற்றி கேட்டால் பெரிய பெரிய விஞ்ஜானிகளின் கூற்றினை ஆதாரமாக சொல்லுவார்கள்.ஏன் எனில் இவர்களை பொருத்தவரை விஞ்ஜானிகள் கடவுள் ,அவர்கள் எழுதிய புத்தகங்கள் வேதம்.
மேல் சொன்ன மதவாதிகளிடம் எப்படி மதத்தை பற்றிய முழுமையான அறிவு இல்லையோ அவ்வாறே இந்த நாத்திகர்களிடம் கடவுள் எதிர்ப்புக்கான சுய சிந்தனை இல்லை.
எனவே கடவுள் எதிர்ப்புக்கான ஆதாரத்தை கொண்டுவாருங்கள் என்றால் விஞ்ஜானிகளின் கூற்றையும் ,அவர்களின் புத்தகங்களையும் காட்டுவார்கள்.
ஒரு விஞ்ஞானியீன் கூற்றை அதே சம காலத்தில் வாழ்ந்த சக
விஞ்ஞானிகளாலும் பிறகு வருகின்ற விஞ்ஞானிகளாலும் மறுக்கப்டுவதை காலம் காலமாக கண்டுவருகிறோம்.அப்படியானால் இவர்களின் கூற்றுக்கு ஏற்ப கருத்து சொல்லும் விஞ்ஞானிகளை தங்களின் கடவுளாகவும்
அவர்களின் புத்தகங்களை வேதமாகவும் கொண்டுள்ளார்கள் என்று சொல்லலாமா
அப்படி சொல்லலாம் என்றால் இவர்கள் பகுத்தறிவு ,சுயசிந்தனை அற்றவர்கள் என்றுதானே அர்த்தம் –
ஆக
நாத்திகர்களின் வேதம் – விஞ்ஞானிகளின் புத்தகம்
நாத்திகர்களின் கடவுள் – விஞ்ஞானிகள்
அப்படிதானே ?
No comments:
Post a Comment